For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பரபரப்பு.. மரத்தில் ஏறி போராடிய 2 விவசாயிகள்.. பெரும் போராட்டத்திற்குப் பின் இறங்கினர்!

அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: மரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற இளைஞர்கள் இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டார் விஷால்.

விவசாயிகள் பிரச்சினைக்காக டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதில் பங்கேற்ற ரமேஷ் மற்றும் அகிலன் ஆகியோர் இன்று மதியம் திடீரென மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக கூறினர்.

Delhi: Actor Vishal pleaded to the youths

அப்போது அங்கு நடிகர் விஷால், இயக்குநர் பாண்டியராஜன் ஆகியோரும் உடனிருந்தனர். பதற்றமடைந்த விஷால், கையெடுத்து கும்பிட்டு இளைஞர்களை கீழே இறங்குமாறு கேட்டுக்கொண்டார். போராட்டமே கெட்டுவிடும், தயவு செய்து கீழே இறங்குங்கள், ரெண்டில் ஒன்று பார்த்துவிடலாம் என்றெல்லாம் விஷால் கூறினார்.

சுமார் 10 நிமிட நேரம் கெஞ்சிய பிறகு இரு இளைஞர்களும் கீழே இறங்கினர். அப்போதுதான் தீயணைப்பு துறை வாகனம் அங்கு வந்து சேர்ந்தது. அவர்களை திருப்பியனுப்பினர் விவசாயிகள்.

Delhi: Actor Vishal pleaded to the youths

அகிலன் கல்லூரி மாணவர், ரமேஷ் விவசாயி. இருவரது குடும்பமுமே விவசாய நசிவால் கஷ்டப்படுவதால் இந்த முடிவை எடுக்க துணிந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே இறங்கிய இளைஞர்களை விஷாலும் பிறரும் சேர்ந்து சமாதானப்படுத்தினர்.

English summary
Actor Vishal pleaded to the youths who theater to commit suicide in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X