For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தினகரனுடன் டெல்லி போலீஸ் சென்னை வருகை... தங்களையும் விசாரிப்பார்களோ.. எடப்பாடி அணிக்கு கிலி- வீடியோ

டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தினகரனை ஐந்து நாள் காவலில் எடுத்து, விசாரணைக்கு சென்னை வந்துள்ளனர். சென்னையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிமுக அம்மா அணியைச் சார்ந்தவர்களும் விசாரிக்கபப்டுவார்

By Suganthi
Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி குற்றப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட தினகரன் சென்னையிலுள்ள அவரது வீட்டுக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இது தினகரனின் நட்பு வட்டத்தில் இருப்பவர்களுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது.

அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த தினகரன், ஆர்கே நகர் இடைதேர்தலில் ஓட்டுக்கு பணம்கொடுத்தார் என்ற புகாரால்,தேர்தலே நிறுத்தப்பட்டது.

 Delhi police brought Dinakaran to Chennai

தேர்தல் ஆணையம் முடக்கிவைத்துள்ள அதிமுக சின்னம் இரட்டை இலையை மீட்க, இடைதரகர் மூலம் பணம்கொடுத்த வழக்கில் டெல்லி குற்றப்பிரிவு போலீஸ், நேற்று முன் தினம் இரவு அவரை கைது செய்தது. அதன்பின் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை குற்றப்பிரிவு போலீஸ், ஐந்து நாள் காவலில் எடுத்தது.

அதையடுத்து, அவரை சென்னையில் பெசண்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து விசாரணை செய்வதற்கு டெல்லி போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவருடன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனேவும் அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில்தொடர்புடைய அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மற்றவர்களும் விசாரிக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ள நிலையில் பலர் 'கிலி' பிடித்து அலைகின்றனர்.

English summary
TTV Dinakran brought to Chennaifor inquiry by Delhi crime police. His close friends are under scanner and will be inquired at any time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X