For Daily Alerts
Just In
மீண்டும் சிறுத்தை?- பயத்தின் உச்சத்தில் பருந்துப்பாறை மக்கள்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பருந்துப்பாறையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்தை ஒட்டிய பகுதியில் வளர்ப்பு பசு ஒன்றினை சிறுத்தை கொன்ற நிலையில் அதே பகுதியில் ஆடு ஒன்று நேற்று இறந்து கிடந்தது. ஆட்டின் பாதி உடல் சிதைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையின் கால் தடங்கள் இருப்பதை கண்டறிந்தனர். எனவே ஆட்டை கொன்றதும் அதே சிறுத்தையாக இருக்கலாம் என வனத்துறையினர் கருதுகின்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனிடையே சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Comments
English summary
The people of the high-range village of parunthupara forests are living in constant fear of leopards that recently lifted some domestic animals.