For Quick Alerts
For Daily Alerts
Just In
இனி சர்ருன்னு போய் மீன் விற்கலாம் – மீனவர்களுக்கு “மொபட்” வழங்க பீகார் அரசு திட்டம்
பாட்னா: பாட்னாவில் மீன்களை கெடுவதற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக முதல்கட்டமாக 10 ஆயிரம் மீனவர்களுக்கு மொபெட்களை மானிய விலையில் வழங்க புகார் மீன்வளத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
மீன்களை பணம் கொடுத்து வாங்கி, அவை கெட்டுப்போவதற்குள் வாடிக்கையாளர்களிடம் கொண்டுசேர்த்து விலையாக்குவது மீன் வியாபாரிகளுக்கு அதைவிட பெரிய துயரமாக இருந்து வருகின்றது.
அதனைத் தடுக்கும் வகையில் சுமார் 36 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபெட்டும், 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐஸ் பெட்டியும் 25 சதவீத மானிய விலையில் மீனவர்களுக்கு வழங்கப்படும்.
இதன்மூலம், தலைச்சுமையாக சுமந்து சென்று மீன்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் மீனவர்களின் சிரமம் குறைக்கப்படும் என மாநில மீன்வளத்துறை அமைச்சர் பைத்யநாத் சாஹ்னி தெரிவித்துள்ளார்.
Comments
English summary
The Bihar government would provide mopeds to fishermen to help them rush fresh fish to consumers. In the first phase, a total of 10,000 fishermen across the state would be given the two-wheelers, Bihar Fishery Development Minister Baidyanath Sahni told a news agency on Friday.
Story first published: Friday, January 30, 2015, 17:57 [IST]