முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி: தீவிர சிகிச்சை
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் அவரின் உடல்நலம் பாதிக்கப்பட்டு டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் ரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவருக்கு நரம்பில் ரத்தம் உறையும் டி.வி.டி. நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதை கவனிக்காமல் விட்டால் உயிருக்கு ஆபத்து ஆகும்.
இந்நிலையில் இது குறித்து சித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
டவுன் ஆனால் அவுட் இல்லை! ஆண்டவன் அருளால் வாழ்க்கையை அச்சுறுத்தும் நோயில் இருந்து மீண்டு வருகிறேன். வாழ்க்கை மிகவும் நாசுக்கானது, அதை பிரார்த்தனை கொண்டு கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Down but Not Out! Life threatening disease (DVT) With God 's Grace will recover. Life is Fragile, handle with Prayer. pic.twitter.com/ifz6UG5bny
— Navjot Singh Sidhu (@sherryontopp) October 6, 2015
51 வயதாகும் சித்துவின் நிலைமை சீராக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.