தெலுங்கானாவில் கொடூரம்: காதலர் கண்முன்பு கல்லூரி மாணவி 4 பேரால் பலாத்காரம்
வாரங்கால்: தெலுங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவி தனது காதலர் கண் முன்பு 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள எனுமமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவியான ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார்.
பாலாஜி நகரில் உள்ள எனுமமுலா விவசாய மார்க்கெட்டில் இருந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அந்த 4 பேர் ராணியின் காதலரை அடித்து நொறுக்கியுள்ளனர்.
காதலரின் கண் முன்பே அந்த 4 பேரும் ராணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.