For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தெலுங்கானாவில் கொடூரம்: காதலர் கண்முன்பு கல்லூரி மாணவி 4 பேரால் பலாத்காரம்

By Siva
Google Oneindia Tamil News

வாரங்கால்: தெலுங்கானாவில் 20 வயது கல்லூரி மாணவி தனது காதலர் கண் முன்பு 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கானா மாநிலம் வாரங்கால் மாவட்டத்தில் உள்ள எனுமமுலா கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது கல்லூரி மாணவியான ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது காதலருடன் வெளியே சென்றுள்ளார்.

Girl gang-raped, boyfriend beaten up in Telangana

பாலாஜி நகரில் உள்ள எனுமமுலா விவசாய மார்க்கெட்டில் இருந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். அப்போது 4 பேர் அவர்களை பின்தொடர்ந்து வந்துள்ளனர். பின்னர் அந்த 4 பேர் ராணியின் காதலரை அடித்து நொறுக்கியுள்ளனர்.

காதலரின் கண் முன்பே அந்த 4 பேரும் ராணியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து ராணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A 20-year-old girl was allegedly gangraped on the outskirts of the city by four persons in front of her boyfriend, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X