For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருமல் சிரப் கொடுத்து தங்கை எதிரில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மூவர் கைது

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிம்லா: இருமல் சிரப் கொடுத்து இளம் பெண்ணை அவரது தங்கையின் கண் எதிரிலேயே 3 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் இமாச்சல பிரதேசத்தில் நடந்துள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் ருக்ரி கிராமத்தை சேர்ந்த 15 வயதாகும் 9வது வகுப்பு மாணவியும், அவரின் 13 வயது தங்கையும், நேற்று மாலை கடத்தப்பட்டனர். ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள ஒரு வீட்டில் அவர்களை அடைத்து வைத்த அதே ஊரை சேர்ந்த அஜய் குமார் (31), சன்னி குமார் (31) மற்றும் மோனு ஆகியோர், இரு சிறுமிகளுக்கும் வாயில் சிரப்பை அளவுக்கு அதிகமாக ஊற்றியுள்ளனர்.

Girl gangraped in front of younger sister in HP, accused held

இருமல் சிரப்பிலுள்ள மயக்கத்தை தூண்டும் காரணிகளால், சிறுமிகள் பாதி மயக்கமடையும் நிலைமைக்கு சென்றுள்ளனர். எதிர்ப்பு குறைவாக இருந்ததால், 15 வயது சிறுமியை மூவரும் எளிதில் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியின் தங்கை கண் எதிரிலேயே இந்த கொடுமை நடந்துள்ளது.

வேதனையுடன் வீடு திரும்பிய சிறுமிகள், நடந்ததை சொல்லி கதறியுள்ளனர். இதையடுத்து போலீசாரிடம் சிறுமிகளின் தந்தையளித்த புகாரின்பேரில் மூன்று கயவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த காமுகர்கள் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போஸ்கோவின் கீழ் பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

English summary
A 15-year-old girl was allegedly gang-raped in front of her younger sister in Rukhri village near here, following which all three accused have been apprehended, police said on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X