For Daily Alerts
Just In
விடைபெற்றார் பிரம்மா.. புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஜெய்தி
டெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து புதியத் தலைமைத் தேர்தல் ஆணையராகியுள்ளார் நசீம் ஜெய்தி.
அஸ்ஸாமைச் சேர்ந்தவர் பிரம்மா. 1975ம் ஆந்திர மாநில பேட்ச்சைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஆவார். 65 வயதாகும் அவர் 3 கடந்த ஜனவரி மாதம் 19வது தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
ஜே.எம். லிங்டோவுக்குப் பிறகு வட கிழக்கு மாநிலத்தை் சேர்ந்த தலைமைத் தேர்தல் ஆணையராக பிரம்மா திகழ்ந்தார்.
பிரம்மாவின் தலைமையில் டெல்லி சட்டசபைத் தேர்தலை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியது.
தற்போது புதிய ஆணையராக நசீம் ஜெய்தி வந்துள்ளார். 3 பேர் கொண்ட தேர்தல் ஆணையத்தில், இரண்டு தேர்தல் ஆணையர்கள் பதவி காலியாக உள்ளது நினைவிருக்கலாம். விரைவில் இரு பதவிகளும் நிரப்பப்படும் என்று தெரிகிறது.
English summary
Chief Election Commissioner H S Brahma on Saturday relinquished the charge of the top post of the nation's poll panel. A 1975-batch IAS officer of Andhra Pradesh cadre, Brahma (65), who hails from Assam, was elevated as the 19th chief election commissioner in January this year and had a stint of a little over three months.
Story first published: Sunday, April 19, 2015, 10:23 [IST]