ம.பி, ராஜஸ்தான், பெங்களூரு.. பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி: மோடி நெகிழ்ச்சி
டெல்லி: பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி, இது பாஜகவுக்கு ஹாட்ரிக் வெற்றி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மொத்தமுள்ள 198 வார்டுகளில் 100 வார்டுகளை வென்று பெங்களூர் மாநகராட்சியை பாஜக மீண்டும் கைப்பற்றியுள்ளது. 76 வார்டுகளில் வென்ற காங்கிரஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
பெங்களூர் மாநகராட்சியை பாஜக கைப்பற்றிய தகவல் வெளியானதும், பிரதமர் மோடி டிவிட்டர் மூலம் கூறியதாவது: நன்றி பெங்களூரு! மக்களுக்கு நன்றியயையும், கர்நாடக பாஜக தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
After MP & Rajasthan, BBMP poll results complete a hat-trick of wins for BJP. This is a win for politics of development & good governance.
— Narendra Modi (@narendramodi) August 25, 2015
மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் உள்ளாட்சி தேர்தல்களை தொடர்ந்து, பெங்களூர் மாநகராட்சியிலும் வெற்றி பெற்றதன் மூலம், பாஜக ஹாட்ரிக் வெற்றியை ஈட்டியுள்ளது. வளர்ச்சி அரசியலுக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி இது.
பாஜக மீது மக்கள் தொடர்ந்து வைத்துள்ள நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன். 125 கோடி மக்களின் விருப்பத்தையும் பூர்த்தி செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இவ்வாறு நரேந்திரமோடி கூறியுள்ளார்.