For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியை, நாயுடன் உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்திய கணவன் கைது.. ஆபாச வீடியோக்களை பார்த்து அட்டூழியம்

நாயுடன் உடலுறவு வைக்காவிட்டால், என்னையும் எனது குழந்தைகளையும், வீட்டை விட்டே வெளியே விரட்டிவிடுவேன் என மிரட்ட ஆரம்பித்தார், என கணவன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார் மனைவி.

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: நாயுடன் உறவு வைத்துக்கொள்ள மனைவியை வற்புறுத்தி கொடுமைப்படுத்திய கணவனை போலீசார் கைது செய்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெலகாவி (முன்பு பெல்காம்), மாவட்டத்தின் கட்டகோல் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த திடுக்கிடும் சம்பவம் நடைபெற்றுள்ளது.

மனைவியை இப்படிப்படிப்பட்ட ஒரு நிலைக்கு தள்ளி அதைப்பார்த்து ஆனந்தம் அடையும் மனநிலையில் இருந்தவர் சந்தீப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற லாரி உரிமையாளராகும். இவருக்கு சொந்தமான லாரியை இவரே ஓட்டி வருகிறார்.

போலீசில் புகார்

போலீசில் புகார்

சந்தீப்பின் மனைவி கீர்த்தி (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது), கட்டகோல் காவல் நிலையத்தில் அளித்த பரபரப்பு புகாரில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: எங்களது இல்லற வாழ்க்கை 4 மாதங்கள் முன்புவரை சந்தோஷமாகத்தான் சென்றது. எங்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். நான்கு மாதங்களுக்கு முன்பிருந்து திடீரென கணவரின் பழக்க வழக்கம் மாறிவிட்டது. தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளும் நேரங்களில் அவர் வெறியுடன் நடந்துகொள்வார். அவரது அதிவேக உடலுறவு நடைமுறையால் நான் உடலளவில் மிகவும் கஷ்டப்பட்டேன்.

ஆபாச வீடியோக்கள்

ஆபாச வீடியோக்கள்

செல்போனில் நிர்வாண படங்களை எனக்கு காண்பிப்பார். பிற ஆடவர்களை அந்த கோலத்தில் பார்க்க மாட்டேன் என நான் கதறியபடி கூறினாலும் வற்புறுத்தி தலையை பிடித்து போன் அருகே கொண்டு சென்று, அதில் வரும் உடலுறவு காட்சிகளை காண்பிப்பார். அதில் வரும் காட்சிகளை போலவே என்னை நடந்து கொள்ள சொல்வார். பழக்கமில்லாத அந்த செயல்களை செய்ய எனக்கு மிகவும் சங்கோஜமாக இருக்கும். இதை அவரிடம் கூறினாலும் வற்புறுத்தி வீடியோக்களில் வரும் காட்சிகளை போல என்னிடம் உறவு கொள்வார்.

நாயுடன் உறவு

நாயுடன் உறவு

இந்த கொடுமைகளுக்கு உச்சம் வைத்தாற்போல, நான்கு நாட்களுக்கு முன்பு ஒரு நாயை வீட்டுக்கு அழைத்து வந்தார். ஏன் என்று கேட்டதற்கு அந்த நாயுடன் நான் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதைப்பார்த்து அவர் ரசிக்க வேண்டும் என்றும் கூறினார். அதிர்ச்சியடைந்த நான், அவரை திட்டிவிட்டேன். ஆனாலும் பிடிவாதம் பிடித்த அவர் என்னை கட்டிலில் தள்ளி நாயை மேலே படுக்க வைத்தார். நான் தட்டிவிட்டு ஓடிவிட்டேன்.

கணவன் கைது

கணவன் கைது

நாயுடன் உடலுறவு வைக்காவிட்டால், என்னையும் எனது குழந்தைகளையும், வீட்டை விட்டே வெளியே விரட்டிவிடுவேன் என மிரட்ட ஆரம்பித்தார். பணியாத என்னை அடித்து, உதைக்க ஆரம்பித்தார். இப்படியே பொறுத்துக்கொண்டிருந்தால், நாயுடன் என்னை உறவுகொள்ள வைத்துவிடுவார் என்பதால் பயந்துபோய் புகார் கொடுக்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த புகாரை பார்த்த போலீசார் திடுக்கிட்டனர். இதையடுத்து சந்தீப்பை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வக்கிர எண்ணத்தால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதால், உளவியல் நிபுணர்களின் கவுன்சலிங் அவருக்கு தேவை என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

English summary
A husband allegedly forced his 25-year-old wife to have sex with a dog in Karnataka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X