ரகசிய பாத்ரூமில் பதுக்கிய ரூ.5.7 கோடி ரூபாய் புதிய நோட்டுக்கள், 32 கிலோ தங்கம் சிக்கியது !
கர்நாடகா மாநிலத்தில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் ரூ5.7 கோடி பணம் மற்றும் 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஹவாலா ஏஜென்டிடம் இருந்து ரூ.5.7 கோடி புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 32 கிலோ தங்கமும் பிடிபட்டது.
நாட்டில் கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக பழைய 500, 1,000 ரூபாய் மற்றும் ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை செய்தது. இதையடுத்து நாடு முழுவதும், கருப்புப் பணத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா ஹூப்ளி பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஹவாலா பணம் மாற்றும் ஏஜென்ட் ஒருவரின் வீட்டில் சோதனை நடைபெற்றது. இச்சோதனையில் ரூ5.7 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 32 கிலோ தங்கம் சிக்கியது. மேலும் 90 லட்சம் மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. குளியறையில் பதுக்கி வைத்திருந்த நோட்டுகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்தது.