For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாயமான விமானத்தில் பயணித்தவர்கள் பாதுகாப்பாக திரும்பி வர சச்சின் பிரார்த்தனை !

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: மாயமான ஏ.என் 32 ரக விமானத்தில் பயணம் செய்த அனைவரும் பாதுகாப்பாக காயமின்றி திரும்பிவருவார்கள் என்று நம்புகின்றேன் என முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

சென்னை தாம்பரம் விமானப் படை தளத்தில் இருந்து 29 பேருடன் அந்தமானின் போர்ட்பிளேருக்கு ஏ.என்.32 என்ற விமானம் இன்று காலை 8 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் கடற்படையால் மிகப்பெரிய தேடுதல் மற்றும் மீட்பு பணியானது நடைபெற்று வருகிறது.

IAF An32 missing: Hope all remain safe and return unharmed, says sachin sachin Hope

விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமும், மாநிலங்களவை எம்.பி.யுமான சச்சின், மாயமான விமானத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக திரும்பி வருவார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: "போர்ட்பிளேயர் அருகே மாயமான விமானத்தில் பயணித்தவர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக காயமின்றி திரும்பி வருவார்கள் என்று நம்புகின்றேன், " என்று கூறிஉள்ளார்.

English summary
Sachin Tendulkar said, Praying for the pax & crew of the IAF An32 missing around Port Blair. Hope all remain safe and return unharmed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X