புலி பாணியில், 'புரூஸ் லீ' தயாரிப்பாளர், இயக்குநர் வீடுகளில் அதிரடி சோதனை!
பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள, இயக்குநர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த ‘புருஸ்லீ' படம் தமிழ்-தெலுங்கு மொழிகளில் இன்று வெளியாகிறது.
'புருஸ்லீ' படத்தைத் தயாரித்த தானய்யா, தில்ராஜூ மற்றும் படத்தின் இயக்குநர் ஸ்ரீனுவைட்லா, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று வருமான வரி அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
ஒரே நேரத்தில் இந்த சோதனை நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் ஏராளமாகக் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள புரூஸ் லீ இன்று உலகெங்கும் வெளியாகும் நிலையில் இந்த சோதனை நடந்துள்ளது. விஜய் படம் புலி வெளியாவதற்கு ஒரு நாள் முன்பாக இதே பாணியில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.