For Quick Alerts
For Daily Alerts
Just In
500 ஹெலிகாப்டர்கள், 220 போர் விமானங்கள்.. 12 நீர்மூழ்கிகள்... இந்தியாவின் பர்ச்சேஸ் லிஸ்ட்!
டெல்லி: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு பலத்தின் முகமே மாறப் போகிறது. 223 பில்லியன் டாலர் அளவுக்கு அதாவது கிட்டத்தட்ட 15 லட்சம் கோடி அளவுக்கு பணத்தை இறக்கி ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்கிக் குவிக்கப் போகிறது இந்தியா.
- அடுத்த 10ஆண்டுகளில் போர் விமானங்கள், தாக்குதல் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வாங்கவுள்ளது.
- 500 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், 12 நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்கப்படும்.
- 100 ஒற்றை என்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானங்கள் மற்றும் 120 இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட போர் விமானங்கள் வாங்கப்படும்.
- இந்திய பாதுகாப்புத்துறை மிகப் பெரிய அளவில் பணத்தை செலவிடப் போவது இதுவே முதல் முறையாகும்.
- இந்தியாவின் முப்படைகளையும் மேலும் வலுவுடையதாக மாற்றக் கூடிய வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
- 2027ம் ஆண்டுக்குள் இந்த கொள்முதல்கள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
- 2017 மார்ச் வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்புத்துறையின் செலவு ரூ. 86,340 கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- நவீனமாக்கலின் ஒருபகுதியாக ஆட்குறைப்பு செய்து கம்ப்யூட்டர் மயமாக்கலிலும் பாதுகாப்புத்துறை தீவிரமாக உள்ளது.
- ஆட்களைக் குறைத்து கம்ப்யூட்டர் மயாக்குவதன் மூலம் ரூ. 5000 கோடி மிச்சப்படுத்தவும் திட்டம்.
Comments
English summary
Defence department has a plan to buy 500 Choppers, 220 Fighter Jets, 12 Submarines in next 10 years.
Story first published: Wednesday, August 24, 2016, 14:09 [IST]