இந்தியாவின் லஞ்ச ஊழல் மிகுந்த 10 நகரங்கள் - பெங்களூர்தான் டாப்!!
டெல்லி: இந்தியாவிலேயே லஞ்ச ஊழல் மிகுந்த நகரங்கள் எவை என்பதை ஊழலுக்கு எதிரான அமைப்பான www.ipaidbribe.com பட்டியலிட்டுள்ளது. இதில் பெங்களூர் நகரம்தான் நெ.1 இடத்தில் இருக்கிறது.
லஞ்ச ஊழல் குறித்து www.ipaidbribe.com 23,803 புகார்களை பெற்றிருக்கிறது.
இவற்றின் மொத்தம் ரூ59 கோடி. இப்படி அதிக லஞ்சம் ஊழலில் திளைக்கக் கூடிய நகரங்களில் பெங்களூர், மும்பை, ஹைதராபாத், சென்னை, டெல்லி, புனே, கொல்கத்தா, லக்னோ, அகமதாபாத், நொய்டா ஆகியவை முதல் 10 இடங்களில் இருக்கின்றன.
பெங்களூரில்..
பெங்களூரில் ரூ 16,62,75467 அளவுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகை 5350 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் 278 அதிகாரிகள் லஞ்சம் வாங்காத நேர்மையானவர்கள் என்று அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்
அகமதாபாத்தில் ரூ 2,72,6910 லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 210 பேருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
நொய்டா
டெல்லியை அடுத்த நொய்டாவில் ரூ3,67,6990 கோடி பணம் 192 பேரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.
லக்னோ
லக்னோவில் ரூ1,60,19,588 கோடி லஞ்சம் 241 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
கொல்கத்தா..
கொல்கத்தாவில் ரூ1,63,33, 425 கோடி லஞ்சம் 344 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
புனே
புனே நகரில் ரூ1,34,54,056 கோடி லஞ்சம் 865 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஹைதராபாத்
ஹைதராபாத் நகரில் ரூ2.,93,38,123 லஞ்சப் பணம் 1376 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
டெல்லி
டெல்லியில் ரூ4,41,43,879 லஞ்ச பணம் 912 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மும்பை..
மும்பையில் 1385 பேருக்கு ரூ6,98,20, 521 லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்ம சென்னையில்..
சென்னையில் 1278 பேருக்கு ரூ7,50,16,228 லஞ்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.