செல்போன்கள் விற்பனை 20 ஆண்டுகளுக்குப் பின் சரிந்தது...
டெல்லி : சாதாரண இந்திய செல்போன்கள் விற்பனை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவில் முதல் முறையாக பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஸ்மார்ட் போன்களை பொதுமக்கள் விரும்புவதால் சாதாரண போன்களுக்கு மவுசு குறைந்துள்ளது.
ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன்கள், டேப்லட்டுகளின் வரத்து இந்தியாவில் செல்போன் விற்பனையை கடந்த 10 ஆண்டுகளில் சூடுபிடிக்கச் செய்தது.
இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டின் 4-வது காலாண்டில் 6 கோடியே 20 லட்சமாக இருந்த செல்போன்கள் விற்பனை 2015 ன் முதல் காலாண்டில் 5 கோடியே 30 லட்சமாக சரிந்திருப்பது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டின் 4-வது காலாண்டை ஒப்பிடும் போது இந்தாண்டின் முதல் காலாண்டில் ஸ்மார்ட் போன்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளது.
ஆசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் ஸ்மார்ட் போன்களின் விற்பனை அதிகம் என்பதும், ஸ்மார்ட் போன்களின் விற்பனையில் அமெரிக்காவை அடுத்த ஆண்டு மிஞ்சும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பட்ஜெட்டில் செல்போன்களுக்கான உற்பத்தி வரியை 6 லிருந்து 12.5 % ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதனால் செல்போன்களின் விலை 4 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
எனினும் ஸ்மார்ட் போன்கள் மீதான மக்களின் மோகம் அதிகரித்துள்ளது என்பதையே சாதாரண போன்களின் விற்பனை வீழ்ச்சி காட்டுகிறது.