தண்டவாள பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 ஊழியர்கள் ரயில் மோதி சாவு! பனி மூட்டத்தால் பரிதாபம்
பாட்னா: பீகார் மாநிலம், ரோடாஸ் மாவட்டத்தில் உள்ள கம்ஹாவ் ரயில் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள தண்டவாளங்களை பராமரிக்கும் பணியில் சில ஊழியர்கள் இன்று ஈடுபட்டனர்.
அப்போது, பிற்பகல் 12.30 மணியளவில் அந்த தண்டவாளத்தின் வழியாக அஜ்மீர்-சீல்டா எக்ஸ்பிரஸ் (12988) வேகமாக வந்ததுள்ளது. ஆனால் பராமரிப்பு பணியில் ஈடுபட்டவர்களால் கடுமையான பனிமூட்டம் காரணமாக ரயில் வந்ததை கவனிக்க முடியவில்லை.
மின்னல் வேகத்தில் அந்த ஊழியர்கள் மீது ரயில் மோதியதில் ரெயில் பாதைகளை ஆய்வு செய்யும் இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஏற்கனவே அந்த ரயில் சுமார் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், அந்த பாதை வழியாக வேறு எந்த ரயிலும் வராது என்ற கணிப்பில் இவர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இந்த கொடூர விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து துறைசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.