For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் ஆங்காங்கு இடியுடன் சாரல் மழை! மக்கள் குஷி

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரில், இன்று இரவு மற்றும் நாளை பகல் வரை ஆங்காங்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதற்கேற்ப நகரின் ஒரு சில இடங்களில் இன்று மாலை மழை பெய்தது.

ஏர்கன்டிஷன் சிட்டி என்று பெயர் பெற்ற பெங்களூரில் இந்த கோடையில் கடும் வெப்பம் வாட்டியெடுத்து வருகிறது. அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவான நிலையில், இன்று 37 டிகிரி செல்சியசை ஒட்டி வெப்பம் நிலவியது.

It has started raining in Bangalore

மதியத்திற்கு மேல் மேகக்கூட்டங்கள் திரண்டதால் வெப்பத்தின் பாதிப்பு குறைந்தது. மாலை 5 மணியளவில் தெற்கு பெங்களூரின் பொம்மனஹள்ளி, பேகூர், பிடிஎம்லேவுட், கொடிகேஹள்ளி, உள்ளிட்ட பகுதிகளில் லேசான தூரல் காணப்பட்டது. நகரின் பல இடங்களில் இடி முழக்கம் கேட்டது. இன்று இரவு மற்றும் நாளை பகல்வரை ஆங்காங்கு இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று வானிலை இலாகா கணித்துள்ளது.

மழையை எதிர்பார்த்து பெங்களூர் மக்கள் காத்திருக்கிறார்கள்.

English summary
It has started raining in Bangalore on May 2.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X