For Daily Alerts
Just In
காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் தாக்குதல்- ராணுவ வீரர் பலி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரத்தின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ரச்பால் சிங் என்ற ராணுவ வீரர் பலத்த காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் 22-வது சீக்கிய ரெஜிமெண்ட்டை சேர்ந்தவர். இந்த சம்பவம் நடந்தபோது பர்வீந்தர் பகுதியில் சிங் பாதுகாப்பு பணியை அவர் மேற்கொண்டிருந்தார்.
இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அத்துமீறி நடத்தியுள்ள 3வது தாக்குதல் இது. ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.படையை சேர்ந்த இரு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
Comments
English summary
An Army jawan was killed in sniper attack by Pakistan troops on Wednesday, who targeted forward posts in Poonch district of Jammu and Kashmir in violation of ceasefire.
Story first published: Thursday, July 30, 2015, 14:25 [IST]