எப்படி இருக்கீங்க ? ஜெயலலிதா கேட்டதால் சொல்லி சொல்லி பூரிக்கும் தே.மு.தி.க அதிருப்தி எம்எல்ஏ
சென்னை : சட்டசபை வளாகத்திற்கு வெளியே, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,வை முதல்வர் ஜெயலலிதா திடீரென அழைத்து, நலம் விசாரித்தார்.
சட்டசபையில், நிகழ்ச்சிகள் முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதாவை வழி அனுப்ப, அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சியினர் காத்திருந்தனர்.அவர்களுடன், தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனும் நின்றிருந்தார்.
அப்போது வெளியே வந்த முதல்வர் ஜெயலலிதா, தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ., சுந்தர்ராஜனை தன் அருகில் அழைத்தார். சுந்தர்ராஜன் சற்று பதற்றத்துடன், முதல்வர் அருகே சென்றார். பின் அவரிடம், 'எப்படி இருக்கீங்க...' என முதல்வர் கேட்க, நலமாக இருப்பதாக, சுந்தர்ராஜன் பதிலளித்தார்.
முதல்வர் என்னை அழைத்து, உடல் நலம் விசாரித்தது, எனக்கு கிடைத்த பேறு' என, சுந்தர்ராஜன் மகிழ்ச்சியுடனும் பூரிப்புடனும் கூறி வருகிறார்.