இன்று கர்நாடகா பந்த்..பெங்களூரில் எவையெல்லாம் முடங்கும், எதெல்லாம் இயங்கும்?
பெங்களூரு: மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தமிழகம் எதிர்க்கிறது. இதை எதிர்த்து கர்நாடா பந்த் இன்று நடக்கிறது. கர்நாடக பந்த்தையடுத்து பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை எவையெல்லாம் இயங்கும், எவையெல்லாம் இயங்காது என்பது பற்றிய ஒரு பார்வை:
பந்த்தால் பாதிக்கப்படுபவை:
*பெங்களூரு நகர பஸ்கள், கேஎஸ்ஆர்டிசி பஸ்கள். குறிப்பாக, தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் நிறுத்தப்படும்.
*பெங்களூரு நகரில் ஆட்டோ, டாக்சி ஓடாது. அந்தந்த சங்கங்கள் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு சப்ளை நாளை வழங்கப்படாது.
* திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டிருக்கும். சினிமா சூட்டிங் நடக்காது.
* பள்ளி, கல்லூரிகளை மூடுவதற்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
* கோடை விடுமுறை காரணமாக, ஏற்கனவே பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்பிருக்காது.
* பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டிருக்கும்.
* பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்படும்.
இயங்க கூடியவை:
*மருத்துவமனைகள் வழக்கம்போல இயங்கும். மெடிக்கல்கள் திறந்திருக்கும்.
*ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு சேவை வாகனங்கள் வழக்கம்போல இயங்கும்.
* வங்கிப் பணிகள் நடைபெறுமா என்பது பற்றி உறுதியான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.