கர்நாடகாவில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 4 சிறுவர்கள்
குல்பர்கா: கர்நாடகாவில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் உள்ளது சித்தபுர் கிராமம். அந்த கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி 4 சிறுவர்களால் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதில் படுகாயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி போலீசார் சனிக்கிழமை இரவு வழக்குப்பதிவு செய்து 4 சிறுவர்களையும் கைது செய்தனர்.
இது குறித்து சிறுமியின் தாய் கூறுகையில்,
என் மகளை பலாத்காரம் செய்த 4 பேரில் ஒருவர் எங்கள் உறவினர். மற்ற 3 சிறுவர்கள் எங்களின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றார்.
முன்னதாக பெங்களூர் பள்ளிகளில் படித்து வரும் 5 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.