வேட்டியை மடிச்சுக்கட்டி பாடகர் யேசுதாஸுக்கு பதிலடி கொடுத்த 'சேச்சி'கள்
திருவனந்தபுரம்: பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது என்று கூறிய பாடகர் யேசுதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கேரள பெண்கள் வேட்டி அணிந்து அதை போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
பிரபல பாடகர் கே.ஜே. யேசுதாஸ் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் பேசுகையில் பெண்கள் ஜீன்ஸ் அணிவது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. அவர்கள் ஜீன்ஸ் அணிந்து பிறருக்கு பிரச்சனை ஏற்படுத்தக் கூடாது என்று கூறினார். இதற்கு கேரள மாநிலம் தவிர பிற மாநில பெண்களும் கடும் எதி
ர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு மதிப்புமிக்க பாடகர் இவ்வாறா பேசுவது என்று பெண்கள் கோபம் அடைந்தனர். இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த சில பெண்கள் யேசுதாஸுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேட்டி அணிந்து அதை மடித்துக் கட்டி போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.
ஜீன்ஸே அணியக் கூடாது என்று அவர் கூறியுள்ள நிலையில் அந்த பெண்கள் வேட்டியை மடித்துக் கட்டி சவால் ஏற்கப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.