வாயை திறந்தாலே சண்டை: மீண்டும் பிரியும் கோஹ்லி, அனுஷ்கா?
மும்பை: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் மீண்டும் காதலை முறித்துக் கொண்டு பிரியப் போவதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். அனுஷ்கா தி ரிங் படத்தில் ஷாருக்கானுடன் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பிசியாக உள்ளார்.
சண்டை
அனுஷ்காவுக்கும், கோஹ்லிக்கும் எப்பொழுது பார்த்தாலும் சண்டையாக உள்ளதாம். இருவரும் அவரவர் கெரியரில் பிசியாக இருப்பதால் பிரச்சனைகளை பேசித் தீர்க்கக் கூட நேரமில்லையாம்.
பிரிவு
தினமும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட பிரிந்துவிடுவது மேல் என்ற முடிவுக்கு கோஹ்லியும், அனுஷ்காவும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கோஹ்லி
அனுஷ்காவும், கோஹ்லியும் கடந்த பிப்ரவரி மாதம் தான் காதலை முறித்துக் கொண்டு ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றனர். பின்னர் கோஹ்லி தூது மேல் தூது விட்டு அனுஷ்காவுடன் மீண்டும் சேர்ந்தார்.
திருமணம்
இந்த ஆண்டே அனுஷ்காவை திருமணம் செய்ய விரும்பினார் கோஹ்லி. ஆனால் அனுஷ்கா மறுத்துவிட்டார். இதனால் தான் அவர்கள் பிப்ரவரி மாதம் பிரிந்தனர். இந்நிலையில் அவர்கள் மீண்டும் பிரியப் போவதாக கூறப்படுகிறது.
அனுஷ்கா
அனுஷ்கா பிராக்கில் படப்பிடிப்பில் இருக்கிறார். அண்மையில் கோஹ்லி பிராக் சென்று அனுஷ்காவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இருவரும் கைகோர்த்து ஊர் சுற்றினார்கள். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கிறது என்று நினைக்கும்போது பிரியப் போகிறார்களாம்.