பெண்கள் ஸ்கின் கலர் லெக்கிங்ஸ் அணிந்தால் ஆண்களுக்கு 'மூடு' வருகிறது: மலையாள எழுத்தாளர்
திருவனந்தபுரம்: தோல் நிறத்தில் பெண்கள் லெக்கிங்ஸ் அணிந்தால் அதை பார்த்து ஆண்களுக்கு மூடு வருவதாக மலையாள எழுத்தாளர் பாபு குழிமாத்தோம் தெரிவித்துள்ளார்.
பெண்கள் ஜீன்ஸ் அணிய எதிர்ப்பு தெரிவித்து பாடகர் யேசுதாஸ் பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார். இந்நிலையில் மலையாள எழுத்தாளரும், கேரளா புத்தக மார்க்கெட்டிங் சொசைட்டியின் செயலாளருமான பாபு குழிமாத்தோம் பெண்கள் தோல் நிறத்தில் லெக்கிங்ஸ் அணிவதால் ஆண்களுக்கு மூடு வந்துவிடுகிறது என்று கூறி பலரையும் வியக்க வைத்துள்ளார்.
இது குறித்து அவர் ஃபேஸ்புக்கில் மலையாளத்தில் தெரிவித்திருப்பதாவது,
அடல்ட்ஸ் ஒன்லி
அடல்ட்ஸ் ஒன்லி. நேற்று அம்பாலமுக்கு ஜங்கஷனில் செல்கையில் என் கார் ஒரு புறமாக ஸ்கிட் ஆனது. கேரள அரசால் நியமிக்கப்பட்டுள்ள என் கார் டிரைவர் திருமணமாகாத வாலிபர் ஆவார்.
பால் உணர்ச்சி
என் கார் டிரைவருக்கு எந்தவித கெட்டப்பழக்கமும் இல்லை. ஆனால் அவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. அவரை எப்படி குறை கூறுவது?. சாலையோரம் பார்த்த காட்சியை பார்த்து எனக்கே லிங்கசலனம் வந்துவிட்டது.
லெக்கிங்ஸ்
சிக்கென்ற உடல்வாகுடன் 40 வயது மதிக்கத்தக்க அழகான பெண் சாலையோரம் ஆடையின்றி நின்று கொண்டிருந்தார். அவர் ஆடை அணியாமல் இல்லை. ஆனால் தோல் நிறத்தில் லெக்கிங்ஸ் போட்டிருந்தார் என என் டிரைவர் விசாக் பின்னர் என்னிடம் தெரிவித்தார். இதை தான் யேசுதாஸ் ஜீன்ஸ் என தவறாக புரிந்து கொண்டார்.
பார்வை ஒன்றே போதுமே
ஒரு பார்வை பார்த்தாலே ஆண்களுக்கு மூடு வந்துவிடும். ஆனால் பெண்களுக்கு தான் சில விளையாட்டுகள் எல்லாம் தேவைப்படுகிறது. இதனால் தான் பெரியவர்கள் பெண்கள் ஹோம்லியாக இருக்க வேண்டும் என்கிறார்கள் என பாபு தெரிவித்துள்ளார்.