பெண் பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் ஆரம்பித்து ஆபாச படங்களை அப்லோடு செய்த ஆசாமி கைது
மும்பை: போலியாக, பெண் ஒருவர் பெயரில் பேஸ்புக் கணக்கில் இயங்கி வந்த ஆசாமி, மும்பை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மும்பை ஜோஷி மார்க் பகுதியை சேர்ந்த வக்ரல்கர் (26) என்ற வாலிபர்தான் கைது செய்யப்பட்டவராகும். இவர் வேறு ஒரு பெண் பெயரில் பேஸ்புக் அக்கவுண்ட் தொடங்கி, அந்த பேஸ்புக் கணக்கில் ஆபாச போட்டோக்களை பகிர்ந்து வந்துள்ளார்.
இந்த போட்டோக்களையும், செயல்பாடுகளையும் பார்த்த பிற ஆண்கள், அந்த பெண்ணின் நடத்தையில் சந்தேகம் கொண்டு, உல்லாசத்துக்கு வருமாறு அழைத்து சாட் செய்துள்ளனர்.
இந்நிலையில்தான், அப்பெண்ணின் நண்பர் இந்த போட்டோவை பார்த்து சம்மந்தப்பட்ட பெண்ணுக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசில் அப்பெண் புகார் அளித்ததன் பேரில், ஐபி முகவரியை வைத்து வக்ரல்கரை கைது செய்துள்ளது மும்பை போலீஸ்.
இப்பெண்ணின் போட்டோவை நெட்டில் இருந்து எடுத்து, தனது வினோத காமத்தேவைக்காக இப்படி ஒரு பேஸ்புக் அக்கவுண்டை அந்த வாலிபர் தொடங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.