For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெற்ற மகளையே பாலியல் பலாத்காராம் செய்த தந்தை கைது!

By Karthikeyan
Google Oneindia Tamil News

லக்னோ: தான் பெற்ற மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை உத்தரப்பிரதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலம் பதாவுன் மாவட்டத்தில் உள்ள ஆவுரங்காபாத் டப்பா என்ற கிராமத்தில் 11 வயது மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 Man held for raping minor daughter in UP's Badaun

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது உறவினர் மற்றும் கிராமத்தினரிடம் கூறியுள்ளார். சிறுமி கூறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் சிறுமியின் தந்தை செயல் குறித்து போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று இரவு அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

மேலும் இன்று அந்த சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக போலீஸ் கண்காணிப்பாளர் சுரேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார். 11 வயது மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

English summary
A man was arrested for allegedly raping his 11-year-old daughter at a village here, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X