பூஜை செய்வதாக ஏமாற்றி மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை கொன்ற கணவன்
திருவனந்தபுரம்: மனைவியை பலாத்காரம் செய்த சாமியாரை தாக்கி கொன்ற கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் சோட்டானிக்கரையை சேர்ந்த சாமியார் நந்தக்குமார் சேலம் அருகே உள்ள ஏரியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.
இதில் துப்பு துலங்க போலீஸ் சூப்பிரெண்டு ராஜன் தனிப்படை அமைத்தார். இந்த நிலையில் போலீசார், சி.என். பாளைத்தை சேர்ந்த டீ மாஸ்டர் கோவிந்தனை இன்று அதிகாலை கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமியார் கோவிந்தனின் வீட்டுக்கு வந்து கோவிந்தன் மனைவியிடம் செய்வினை செய்துள்ளனர் என கூறி பூஜை செய்துள்ளார். அப்போது அவரை சாமியார் பலாத்காரம் செய்து விட்டார். இதையறிந்த கோவிந்தன் சாமியாரை மது குடிக்க வைத்து பின்னர் தேங்காய் உறிக்கும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் பிணத்தை யாருக்கும் தெரியாமல் தூக்கி சென்று ஏரியில் வீசி எரித்துள்ளார்.இவரிடம்இருந்து கத்தியை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கிறார்கள்.கொலை செய்யப்பட்ட சாமியார் நந்தக்குமார் போலி சாமியார் என தெரியவந்துள்ளது.