For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெண் கொடுக்க மறுப்பு.. ஆத்திரத்தில் காதலியின் தந்தையை சுட்டுக்கொன்ற இளைஞர்

பீகாரில் பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் காதலியின் தந்தையை சுட்டுக்கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

பாட்னா: பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரத்தில் காதலியின் தந்தையை இளைஞர் சுட்டுக்கொன்ற சம்பவம் பீகார் மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் போஜ்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சோம்பால் (48). இவரின் மகளும் அதே பகுதியை சேர்ந்த மொண்டு (25) என்ற இளைஞரும் காதலித்து வந்தாக கூறப்படுகிறது.

Man shot dead by daughters lover

இந்நிலையில், காதலியைத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த மொண்டு, சோம்பால் வீட்டிற்கு சென்று அவரது மகளைத் திருமணம் செய்து தருமாறு கேட்டிருக்கிறார். ஆனால் மொண்டுவிற்கு பெண் தர சோம்பால் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மொண்டு, காதலியின் தந்தை சோம்பாலை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இதுதொடர்பாக போஜ்பூர் போலீசார் மொண்டுவைக் கைது செய்துள்ளனர்.

பெண் கொடுக்க மறுத்த காதலியின் தந்தையை காதலன் சுட்டுக்கொன்ற சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
A 48-year-old man was shot dead by his daughter's lover after refusing to marry her off to him in Bhojpur village here, police said today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X