உ.பி.யில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. மீட்பு பணிகள் தீவிரம்
மீரட்டில் இருந்து உ.பி. தலைநகர் லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.
லக்னோ : உத்தர பிரதேச மாநிலம் ராம்பூரில் விரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்திற்குள்ளாகி உள்ளன.
மீரட்டில் இருந்து உ.பி. தலைநகர் லக்னோ நோக்கிச் சென்ற ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் ஏற்பட்டதா என தகவல் ஏதும் வெளியாகவில்லை.
ரயில் விபத்து நடந்த பகுதியில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன. முதலில் 10 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. வடக்கு ரயில்வே செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், விபத்தில் 2 பேருக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
4/#RajyaRaniExpress passed Mundhapande at 8:05 hrs,derailed b/w Mundhapande-Rampur at 8:15hrs at km no 1374/12-25.No Casualty Two Injured pic.twitter.com/aersbCKL2O
— Ministry of Railways (@RailMinIndia) April 15, 2017
தீவிர காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் உதவித்தொகையாக அறிவித்துள்ளார் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.
Enquiry ordered to look into the cause,strict action will be taken against any lapse 2/
— Suresh Prabhu (@sureshpprabhu) April 15, 2017
0121-6401215 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு ரயில் விபத்து தொடர்பாக உதவி கோர முடியும். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு.
#Visuals from Uttar Pradesh: Eight coaches of Meerut-Lucknow Rajya Rani Express derail near Rampur. pic.twitter.com/Lljzs16Cdq
— ANI UP (@ANINewsUP) April 15, 2017