கணவர் ராகுல் தான் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளினார்: மாடல் ரஷ்மி நாயர்
திருவனந்தபுரம்: கணவர் ராகுல் பசுபாலன் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக மாடல் ரஷ்மி நாயர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் ஆண்களை கவர்ந்து விபச்சாரம் செய்த வழக்கில் கேரளாவைச் சேர்ந்த மாடல் ரஷ்மி நாயர், அவரது கணவரும், கிஸ் ஆப் லவ் போராட்ட தலைவருமான ராகுல் பசுபாலன், காசரகோட்டைச் சேர்ந்த பிரபல ரவுடி அக்பர் உள்ளிட்டோர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் ரஷ்மி அளித்துள்ள வாக்குமூலம் பற்றி கேரளாவில் உள்ள பல நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ராகுல்
ராகுல் தன்னை நிர்வாணமாக புகைப்படங்கள் எடுத்து அதை இணையதளங்களில் வெளியிட்டு பெரும்புள்ளிகளிடம் பேரம் பேசினார் என்று ரஷ்மி தெரிவித்துள்ளாராம்.
சந்தேகம்
ராகுல், ரஷ்மி ஆகியோரின் நடவடிக்கை பற்றி ராகுலின் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்மி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
விபச்சாரம்
ராகுல் தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளிவிட்டதாக ரஷ்மி போலீசாரிடம் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.
ஃபேஸ்புக்
ஃபேஸ்புக்கில் ராகுல் ரஷ்மியின் பெயரில் ஒரு பக்கத்தை துவங்கி அதில் சிறுமிகளின் ஆபாசப் புகைப்படங்களை வெளியிட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.