ரம்ஜான் நோன்பு தொடக்கம்… பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி: புனித மாதமான ரம்ஜான் நோன்பு மாதம் தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
My greetings on Ramzan. pic.twitter.com/bqWtwtaiaK
— Narendra Modi (@narendramodi) June 18, 2015
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "முஸ்லிம் மக்களுக்கு என் வாழ்த்துகள். இந்த ரம்ஜான் அனைத்து மக்களுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் நல்கட்டும். ரம்ஜான் நோன்பு மேற்கொள்ளப்படும் இந்த புனித மாதத்தில் சமுதாயத்தில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
مقدس ماہ رمضان شروع ہونے پر میری مبارک باد۔ pic.twitter.com/Lm4fuGgkgG
— Narendra Modi (@narendramodi) June 18, 2015
உருது மொழியிலும் தனது வாழ்த்தை பிரதமர் மோடி பதிவு செய்துள்ளார்.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. இந்த ஆண்டு நோன்பு துவங்கும் போதே வாழ்த்து கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் மோடி.