பாழடைந்த போலீஸ் நிலையக் கட்டிடத்தில் 60 மண்டை ஓடுகள் கண்டுபிடிப்பு: உ.பி.யில் பரபரப்பு!
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் பயன்படுத்தாத போலீஸ் நிலைய கட்டிடத்தில் 60 மனித மண்டை ஓடுகள் கண்டெடுக்கப் பட்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் உன்னாவ் என்ற இடத்தில் போலீஸ் அலுவலக வளாகம் உள்ளது. பயன்படுத்தாத நிலையில் உள்ள அந்தக் கட்டிடத்தில் இருந்து சுமார் 60 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக அம்மாநில போலீசார் கூறுகையில், ‘மண்டை ஓடுகள் கண்டெடுக்கப் பட்ட அந்த அறை முன்பு மருத்துவமனையின் ஒரு பகுதியாக இருந்ததாகவும், பிரேத பரிசோதனை முடித்த மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புகூடுகள் தான் தற்போது கண்டெடுக்கப் பட்டுள்ளவை' எனவும் தெரிவித்துள்ளனர்.
போலீசார் இவ்வாறு விளக்கம் அளித்த போதும், ஒரே அறையில் இருந்து சுமார் 60 மனித மண்டை ஓடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப் பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.