”ஆசிரியர் தின விழா”- செப்டம்பர் 4ஆம் தேதி மாணவர்களுடன் உரையாற்றும் நரேந்திர மோடி
டெல்லி: இந்தியாவில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 4 ஆம் தேதிநாடு முழுவதிலும் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
இது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்தறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறுகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும் வருவதால் பெரும்பாலான பள்ளிகளில் விடுமுறை அறிவிக்கப்படும்.
ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது.
சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இதன் காரணமாக இந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி பள்ளி மாணவர்களிடம் நேரடியாக பேச பிரதமர் முடிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ளார்.