கூகுள் மாநாட்டில் சிறப்புரையாற்றும் நெல்லையின் அறிவாளிப் பெண் விசாலினி!
டெல்லி: கூகுள் நிறுவனத்தின் சார்பில் டெல்லியில் நடைபெறுகின்ற சர்வதேச உச்சி மாநாட்டில் நெல்லையைச் சேர்ந்த பதினான்கே வயதான விசாலினி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாடு நாளை டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் இதுவரையில் 5 உலகசாதனைகள் படைத்த பாளையங்கோட்டை 9 ஆம் வகுப்பு மாணவி விசாலினி சிறப்புரை ஆற்ற உள்ளார்.
கூகுள் ஆப்ஸ் பார் எஜூகேசன்:
இவர் கணினிதுறையில் கிளவுட் கம்யூட்டிங் கூகுள் ஆப்ஸ் பார் எஜூகேசன் என்ற தலைப்பில் காலை10.30மணி முதல் 11.30 மணிவரை ஒரு மணிநேரம் சிறப்புரையாற்ற அழைக்கப்பட்டு உள்ளார்.
திறமையானவர்கள் சந்திப்பு:
இந்த உச்சிமாநாட்டில் விசாலினியைத் தவிர ஜப்பான் சாகா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்ட்ரு மியர்காப் மற்றும் பிட்ஸ் பிலானி பல்கலைக்கழக கணினி துறைத்தலைவர் ராகுல்பானர்ஜி ஆகியோரும்உரையாற்ற உள்ளனர்.
உச்சி மாநாட்டில் சிறப்புரை:
கூகுள் நிறுவத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளி மாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல் முறைஆகும்.
8 சர்வதேச மாநாடுகள்:
இதற்கு முன்னதாக விசாலினி மத்தியப்பிரதேச தலைநகர் போபால், கர்நாடகாவின் மங்களூரு, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட 8 சர்வதேச கணினி மாநாடுகளில் தலைமைவிருந்தினராகக் கலந்துகொண்டு கீநோட் உரையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குவியும் பாராட்டுகள்:
14 வயதில் கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் சிறப்புரை ஆற்ற இருக்கும் நெல்லை பள்ளி மாணவி விசாலினிக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது.
அங்கீகாரம் தேவை:
எனினும், இதுவரையில் அவருக்கு சரியான அங்கீகாரம் அமையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஐகியூ அளவு அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் பள்ளிகளில் கூட இடம் கிடைக்கவில்லையாம்.
திறமைக்கு மரியாதை தேவை:
சிறந்த திறமைகள் இருந்து இதுபோன்ற திறமைசாலிகளை நாம் பெருமளவில் அங்கீகரிப்பதில்லை. அப்படி அங்கீகரித்தால் தமிழ்நாட்டில் கொட்டிக் கிடக்கின்ற புத்திசாலிகளாலும், திறமைசாலிகளாலும் இந்தியாவையே பெரும் முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பது கவனிக்க தக்க ஒன்று.. கருத்தில் கொள்வார்களா ஆள்பவர்கள்?