For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராம்நாத் கோவிந்த்திற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு.. உறுதியாகும் பாஜக வெற்றி

ஜனாதிபதி வேட்பாளராக ஆர்.எஸ்.எஸ்காரரான ராம் நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரித்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரித்துள்ளார். இதனால் பாஜக வெற்றி பெறுவது உறுதியாகி வருகிறது.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இதனால் புதிய ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

அதற்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது வேட்பாளராக பிகார் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை அறிவித்தது.

ஆதரவு கேட்ட மோடி

ஆதரவு கேட்ட மோடி

இதனைத் தொடர்ந்து, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், தமிழக முதல்வர் பழனிச்சாமி உள்ளட்ட மாநில முதல்வர்களை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டார். அதனைத் தொடர்ந்து ராம் நாத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது.

நிதீஷ் ஆதரவு

நிதீஷ் ஆதரவு

பாஜக அறிவித்துள்ள ராம் நாத்தை பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரித்து அறிவித்துள்ளார். மேலும் அவருடன் கூட்டணியில் உள்ள லாலுவும் நேற்று ராம்நாத்தை ஆதரித்துள்ளார். மேலும், சிறப்பான வேட்பாளர் ராம் நாத் என்றும் லாலு கூறினார்.

 பழனிச்சாமி ஆதரவு

பழனிச்சாமி ஆதரவு

இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சென்னையில் தமிழக முதல்வர் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின்படி பாஜக வேட்பாளர் ராம் நாத்தை ஆதரிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

நவீன் பட்நாயக்

நவீன் பட்நாயக்

இதேபோன்று ஒடிஷா மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கும் ராம் நாத் கோவிந்த்தை ஆதரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராம் நாத் கோவிந்த்தின் வெற்றி உறுதியடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

English summary
Bihar CM Nitish Kumar has extended his support to BJP’s presidential candidate Ram Nath Kovind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X