For Daily Alerts
Just In
மனைவி சடலத்தை சுமந்த கணவன்.. மனித உரிமைகள் ஆணையம் கோபம்.. ஒடிசா அரசுக்கு நோட்டீஸ்
டெல்லி: ஒடிசாவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு மனைவியின் சடலத்தை கணவன் தூக்கி சென்ற விவகாரத்தில், விளக்கம் கேட்டு ஒடிசா அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஒடிசாவில் இறந்த பெண்ணின் இடுப்பு எலும்பை உடைத்து தூக்கி சென்ற சம்பவத்தையும் நோட்டீசில் மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டு கண்டித்துள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 21ன்கீழ், வாழும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமையின்கீழ், இறந்த சடலங்களையும் மரியாதையுடன் நடத்த வேண்டும், அவற்றுக்கு உரிய வகையில் இறுதி சடங்கு செய்யப்பட வேண்டும் என்பது முக்கியம்.
ஆனால் ஒடிசாவில் நடந்த இவ்விரு சம்பவங்களும் அந்த அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. எனவே இதகுறித்து, ஒடிசா அரசு பதிலளிக்க வேண்டும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
Comments
English summary
Expressing anger, the National Human Rights Commission has issued notice to Odisha government over the incident where a man had to carry his wife's dead body for 10 Km.
Story first published: Saturday, August 27, 2016, 13:29 [IST]