For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நோக்கியா நிறுவனத்தின் இந்திய சந்தை தலைமை அதிகாரியாக சஞ்சய் மாலிக் நியமனம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

மும்பை: நோக்கியோ நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான தலைமை அதிகாரியாக சஞ்சய் மாலிக் நியமிக்கப்பட்டுள்ளார்.

நோக்கியோ நிறுவனத்தின் இந்திய சந்தைக்கான தலைமை அதிகாரியாக இருப்பவர் சந்தீப் ஜிரோத்ரா. இவர் 1996 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார்.

Nokia appoints sanjay malik as head of Indian market

அந்நிறுவனத்தில், 2003-லிருந்து 2004-ம் ஆண்டுவரை ஆசிய பசிபிக் பிராந்தியத்தின் தொழில் வளர்ச்சித் தலைவராகவும், நோக்கியா சீமென்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தில் 2009லிருந்து 2010 வரை விற்பனை பிரிவுத் தலைவராகவும், 2010-11 வரை இந்திய துணை பிராந்தியத்திற்கான தலைவராகவும் இருந்தவர்.

தற்போது அவருக்கு பதிலாக சஞ்சய் மாலிக் நோக்கியாவின் இந்திய சந்தைக்கான தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நோக்கியா குளோபல் சர்வீசஸ் வலை அமைப்பு தலைவராக உள்ளார். இவர் கடந்த 2000 மாம் ஆண்டில் நோக்கியா நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அவர் பொறுப்பேற்க உள்ளதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது.

English summary
Nokia has announced the appointment of Sanjay Malik as the head of Indian market
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X