அழகிகளுடன் அந்தரங்கம்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ.. வருண் காந்திக்கு நெருக்கடி தர சதி?
டெல்லி: அழகிகளுடன் உல்லாசமாக இருந்ததற்கு உபகாரமாக, நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை வருண் காந்தி விற்றுவிட்டார் என எட்மோன்ட்ஸ் ஆலன் குற்றம்சாட்டியுள்ள நிலையில், வருண் காந்தி போன்ற தோற்றத்துடன் கூடிய ஒருவர் மாடல் அழகியோடு ஆபாச கோலத்தில் உல்லாசமாக இருக்கும் காட்சிகள் சோஷியல் மீடியாவில் கசிந்துள்ளன.
மாடல் அழகியோடு பல்வேறு வகையான கோலங்களில் அந்த நபர் உல்லாசமாக இருப்பது போல போட்டோக்கள் சுற்றி வருகின்றன. அது வருண் காந்திதானா என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரம் ஏதும் இல்லை. இருப்பினும், இப்போட்டோக்களை ஆய்வுக்கு உட்படுத்த சோஷியல் மீடியாக்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
வருண் காந்தி போன்ற ஒரு நபரை போட்டோஷாப் மூலம் கட்டிங்-ஒட்டிங் செய்து, இப்படி உலவ விட்டிருந்தால், அப்படிப்பட்ட நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.
தன்மீதான குற்றச்சாட்டுகளை வருண் காந்தி ஏற்கனவே மறுத்திருந்தார். நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டியில் நான் இடம்பிடித்துள்ளேன் என்பதை வைத்துக்கொண்டு இவ்வாறு கட்டுக்கதை புனையப்படுகிறது என்றும், நாடாளுமன்ற பாதுகாப்பு கமிட்டிக்கு, ரகசிய தகவல்களை பாதுகாப்பு அமைச்சகம் ஷேர் செய்ததே கிடையாது என்பதுதான் உண்மை என்றும் வருண் காந்தி கூறியிருந்தார்.
உத்தரபிரதேச தேர்தலுக்கு 6 மாதங்களே உள்ள நிலையில், அம்மாநில முதல்வர் வேட்பாளராக வருண் காந்தியை முன்னிருத்த பாஜக திட்டமிட்டிருந்தது. இந்த நேரத்தில் வருண் காந்தி மீது இவ்வாறு புகார் எழுந்துள்ளது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.