For Daily Alerts
Just In
வாகா எல்லையில் ரம்ஜான் இனிப்பை வாங்க மறுத்த பாக். ராணுவம்!
வாகா: வாகா எல்லையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி இந்தியா ராணுவத்தினர் கொடுத்த இனிப்பை வாங்கிக் கொள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தானின் வாகா எல்லையில் முக்கிய பண்டிகை நாட்களில் இருநாட்டு வீரர்களும் இனிப்பு பரிமாறிக் கொள்வது வழக்கம்.. இந்திய சுதந்திர தினம், குடியரசுதினம் மற்றும் முக்கிய விழா நாட்களில் இனிப்பு வழங்குவது வழக்கமானது.
இதேபோல் பாகிஸ்தான் ராணுவமும் வழங்கும். இஸ்லாமியர்களின் ரம்ஜான் பண்டிகை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இந்திய ராணுவத்தினர் இன்று இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். ஆனால் இனிப்பை ஏற்க பாகிஸ்தான் ராணுவத்தினர் மறுத்துவிட்டனர்.
Comments
English summary
The custom of exchanging sweets, a practice that resumed in March after a year of bitterness between India and Pakistan, has been suspended again amid a renewed frost in ties.