இப்படியே போனால் காங்கிரஸில் சோனியா, ராகுல் மட்டுமே இருப்பார்கள்: பாஜக கிண்டல்
டெல்லி: ஒவ்வொருத்தராக நீக்கினால் காங்கிரஸில் சோனியாவும், ராகுலும் மட்டுமே இருப்பார்கள் என்று பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதற்காக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பதவியை இழந்தார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர். பிரதமர் பதவியில் இருக்கும் மோடி நல்ல மாற்றங்களை ஏற்படுத்தி வருவதாக கூறி காங்கிரஸின் கோபத்திற்கு ஆளாகினார் தரூர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில்,
இப்படியே போனால் காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மட்டுமே இருப்பார்கள் என்றார்.
பாஜக தலைவர் சித்தார்த் நாத் சிங் கூறுகையில்,
ஒருவர் நல்லது செய்தால் அதை பாராட்டுவதில் என்ன தவறு?. சுத்தமான இந்தியா திட்டத்தை மகாத்மா காந்தி துவக்கினார். ஆனால் காங்கிரஸோ மோடியை புகழ்பவர்களை சுத்தம் செய்கிறது என்றார்.