ஏழைக்கு அடித்தது யோகம்: லாட்டரியில் 1 கோடி பரிசு.. இன்ப அதிர்ச்சியில் ஏழை வியாபாரி!!
திருவனந்தபுரம் அருகே ஒருவருக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஏழை வியாபாரி மகிழ்ச்சியில் திளைத்துள்ளார். அந்தப்பணத்தில் சொந்த வீடு கட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஏழை வியாபாரி இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.அந்தப்பணத்தில் சொந்த வீடு கட்ட அவர் முடிவு செய்துள்ளார்.
கேரளா மாநிலம் மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் இருந்து லாட்டரி டிக்கெட் வாங்கி பிழைப்பு நடத்தி வருகிறார்.
அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்தே தனது குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கேரள அரசின் கருண்யா லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார்.
10 டிக்கெட் வாங்கியதில் 9 டிக்கெட்டை விற்க முடிந்தது. ஒரு டிக்கெட்டை விற்க முடியவில்லை. இந்நிலையில் மதியம் இரண்டு மணிக்கு லாட்டரி குலுக்கல் நடந்தது. இதில் சந்தோஷிடம் இருந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.1 கோடி ரூபாய் கிடைத்தது.
இதை பார்த்த அவர் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
சொந்த வீடு இல்லாத சந்தோஷ் தனது மனைவி சுபாஷினியுடன் உறவினர் வீட்டில் வசிதது வருகிறார். இதற்கு முன்பு ஒரு டீ கடையில் வேலை பார்த்துள்ளார்.
லாட்டரி மூலம் கிடைத்த பணத்தில் சொந்த வீடு கட்ட தீர்மானித்துள்ளார். டிக்கெட்டை வீட்டில் பாதுகாப்பாக வைக்க முடியாது என்பதால் மூவாற்றுபுழா போலீஸ் நிலையத்தில் சந்தோஷ் லாட்டரி டிக்கெட்டை ஓப்படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.