For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜம்மு காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை.. ராணுவ வீரர் காயம், தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் ஊடுறுவிய தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே இன்று அதிகாலை பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் ஊடுறுவிய தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே இன்று அதிகாலை பயங்கர துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.ராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பந்திப்போரா மவாட்டத்தின் ஹஜின் கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

One terrorist killed in an encounter with security forces in Kashmir

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாதிகள் எத்தனை பேர் ஊடுறுவியுள்ளனர் என்பது துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்த பின்னரே தெரியவரும் என பாதுபாப்புப் படை அதிகாரிகள் தேரிவித்துள்ளனர்.

English summary
One terrorist was killed on Tuesday morning in an encounter with security forces in the Bandipora district of northern Kashmir. One soldier has been injured during the gunfight. The gunfight operation is still in progress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X