பாகிஸ்தான் கையை வச்சே அவங்களுக்கு கொடுத்த அடி இது... முன்னாள் ராணுவ தளபதி
டெல்லி: பாகிஸ்தானை அவர்கள் பாணியிலேயே அடித்து பழிக்குப் பழி வாங்கப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி பி.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கொத்துக் கொத்தாக தீவிரவாதிகளை கொன்றுள்ளது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் விமானப்படை தளபதி பி. கே. பாண்டே ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
இன்றைய தாக்குதல் அத்துமீறிய செயல் அல்ல. விமானங்கள் மூலம் தான் எல்லை தாண்டி இது போன்று அதிரடி தாக்குதல்கள் நடத்த முடியும். ராணுவம் திட்டமிட்டு இதை நடத்தியுள்ளது.
நம் ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் எதிரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலால் பின்விளைவுகளும் ஏற்படும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த பிரச்சனை பெரிதாக வாய்ப்பு உள்ளது.
இந்திய ராணுவம் எடுத்துள்ள முயற்சி நல்லது தான். இதற்கு பெயர் தான் அவர்கள் பாணியிலேயே அடித்து பழிக்குப் பழி வாங்குவது என்றார்.