எனக்கு இன்னும் லவ் லெட்டர் வருதே.. லோக்சபாவில் சிரிப்பலையை கிளப்பிய "வெங்கையா வெடி"!
டெல்லி: எனக்கு இன்னும் கூட லவ் லெட்டர்கள் வரத்தான் செய்கிறது. எனது மனைவிக்கும் அது தெரியும். ஆனால் அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்ல என்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
வெங்கையா நாயுடுவின் இந்தப் பேச்சு லோக்சபாவில் பெரும் சிரிப்பலையை கிளப்பி விட்டது.
ராஜ்யசபாவில் பாஜக உறுப்பினர் மனோஜ் திவாரி பேசுகையில், டெல்லியில் முறைப்படுத்தப்படாத குடியிருப்புகளை அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை தாக்கல் செய்ததற்காக பாராட்டிப் பேசினார். அப்போது ஐ லவ்யூ வெங்கையாஜி என்றும் கூறினார்.
இதையடுத்து எழுந்த வெங்கையா நாயுடு, மனோஜ் திவாரி எனக்கு ஐ லவ்யூ கூட சொன்னார். அதில் எனக்குப் பிரச்சினை இல்லை. அதை எனது மனைவி தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார். காரணம், எனக்கு இப்போதும் கூட லவ் லெட்டர்கள் வந்துகொண்டுதான் உள்ளன. பலர் இன்னும் கடிதம் அனுப்பிக் கொண்டுதான் உள்ளனர் என்றார் வெங்கையா.
வெங்கையாவின் இந்தப் பேச்சைக் கேட்டதும் உறுப்பினர்கள் வாய் விட்டு்ச் சிரித்தனர். சபையின் இறுக்கமும் சற்று குறைந்தது.