For Daily Alerts
Just In
பெட்ரோல் லிட்டருக்கு 1 பைசா, டீசல் லிட்டருக்கு 44 பைசா விலை உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 பைசாவும் உயர்ந்துள்ளது. விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன.
இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ஒரு பைசாவும், டீசலுக்கு 44 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
Comments
English summary
Petrol price hiked by 1 paisa a litre and diesel by 44 paisa per litre.