For Daily Alerts
Just In
ஓராண்டு நிறைவை கொண்டாடுவது எப்படி? நாடு திரும்பிய மோடி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை!
டெல்லி: சீனா உள்ளிட்ட வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைகிறது. இதனையொட்டி உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோருடன் பிரதமர் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசின் ஓராண்டு ஆண்டு நிறைவு விழாவை எப்படி கொண்டாடுவது என ஆலோசிக்கப்பட்டது.
மேலும் ஓராண்டு நிறைவையொட்டி பா.ஜ.க சார்பில் விருந்து அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
Comments
English summary
The Prime Minister Narendra Modi met his top 5 ministers to discuss the completion of the BJP led coalition's first year.
Story first published: Wednesday, May 20, 2015, 13:11 [IST]