வந்துருச்சு “எளிய பதிவு…எளிய திருத்தம்” முறை – வாக்காளர்களுக்கு புதிய வசதி
டெல்லி: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்காக "எளிய பதிவு, எளிய திருத்தம்" என்ற திட்டத்தை இந்த ஆண்டின் கருப்பொருளாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தார். அந்த செய்தியில், "தேசிய வாக்காளர் தினத்தையொட்டி எனது சக குடிமக்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்திய தேர்தல்களில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி வருகின்றன. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகளை நான் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் "எளிய பதிவு, எளிய திருத்தம்" முறையை பாராட்டியுள்ள அவர், இந்த திட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.