நவாஷ் ஷெரிப்-க்கு இருதய அறுவை சிகிச்சை - பூரண குணமடைய மோடி வாழ்த்து
டெல்லி: பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப் மேற்கொள்ளவிருக்கும் இருதய அறுவை சிகிச்சையில், அவர் பூரண குணமடைய வாழ்த்துக்கள் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இருதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு, லண்டனில் இம்மாதம் 31ம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதையடுத்து மருத்துவரின் அறிவுரைப்படி அவர் ஒருவார காலம் முழுவதுமாக மருத்துவமனையில் இருப்பார் என தகவல் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
My best wishes to PM Nawaz Sharif Sahab for his open heart surgery on Tuesday. And for his speedy recovery & good health. @MaryamNSharif
— Narendra Modi (@narendramodi) May 28, 2016
நவாஸ் ஷெரிப் மேற்கொள்ளவிருக்கும் இருதய அறுவை சிகிச்சை வெற்றியடையவும், விரைவில் குணமாகி உடல் நலம் பெற எனது வாழ்த்துக்கள் என மோடி குறிப்பிட்டுள்ளார்.