இந்தியாவின் நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளது… ஓராண்டு சாதனை பற்றி மக்களுக்கு மோடி கடிதம்
டெல்லி: பாஜக அரசின் ஓராண்டு பணிகளானது நாடு இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமது அரசின் ஒராண்டு சாதனை குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற வெளிப்படைத் தன்மை கொண்ட கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவையே தமது அரசின் அடிப்படைக் கொள்கை.
ஓராண்டு ஆட்சியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டுள்ள மோடி, வெளிநாட்டில் இந்தியாவின் கவுரவம் பெருமை அதிகரித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே மேக் இன் இண்டியா மற்றும், திறன்மிகு இந்தியா திட்டங்களின் முக்கிய நோக்கம்.
இவ்வாறு பிரதமர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.